ஆட்டோமொபைல்
மூன்றாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்ட சர்வதேச ஆட்டோ விழா
ஜெனிவா சர்வதேச ஆட்டோ விழா தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் பிரபலமான ஜெனிவா மோட்டார் விழா மூன்றாவது ஆண்டாக ரத்து செய்யப்பட்டது. ஆட்டோ நிறுவனங்கள் மற்றும் விழாவில் கலந்து கொள்வோரின் நலன் கருதி ஆட்டோ விழா ரத்து செய்யப்படுவதாக அதன் ஏற்பட்டாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
முன்னதாக ஆண்டு 2020 மற்றும் 2021 ஜெனிவா மோட்டார் விழா கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அந்த வரிசையில் தற்போது 2022 மோட்டார் விழாவும் ரத்து செய்யப்படுவதாக விழா ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.
"2022 ஆம் ஆண்டிற்கான ஆட்டோ விழாவை நடத்த எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டோம். எனினும், பெருந்தொற்று காலக்கட்டத்தில் நிலைமை எங்களின் கட்டுக்குள் இல்லை. 2023 ஆண்டு ஜெனிவா சர்வதேச ஆட்டோ விழா நிச்சயம் சிறப்பான முறையில் நடைபெறும் என நம்புகிறோம்," என விழா ஏற்பாட்டு குழுவின் தலைவரான மௌரிஸ் டுரெடினி தெரிவித்தார்.