ஆட்டோமொபைல்
வோக்ஸ்வேகன் கார்

புதிய விற்பனை முறை அறிமுகம் செய்த வோக்ஸ்வேகன்

Published On 2021-09-09 08:59 GMT   |   Update On 2021-09-09 09:02 GMT
வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் தனது கார் விற்பனையை அதிகப்படுத்த புதிய திட்டத்தை அறிவித்தது.


ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான வோக்ஸ்வேகன் இந்தியாவில் சந்தா முறையில் கார் விற்பனையை அறிவித்து இருக்கிறது. புதிய சந்தா முறையை செயல்படுத்த வோக்ஸ்வேகன் நிறுவனம் ஆரிக்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளது.

புதிய சந்தா முறையின் கீழ் வாடிக்கையாளர்கள் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ, டி ராக் அல்லது வென்டோ போன்ற மாடல்களை வாங்காமல் சொந்தம் கொண்டாட முடியும். படிப்படியாக இந்தியா முழுக்க சந்தா முறையை கொண்டுவர வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.



முதற்கட்டமாக டெல்லி, மும்பை, பூனே, ஆமதாபாத், பெங்களூரு, சென்னை மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள சுமார் 30 விற்பனை மையங்களில் சந்தா முறையை வோக்ஸ்வேகன் கொண்டு வருகிறது. 

Tags:    

Similar News