ஆட்டோமொபைல்
டாடா டிகோர் இ.வி.

விற்பனையகம் வரத்துவங்கிய டாடா எலெக்ட்ரிக் கார்

Published On 2021-08-23 10:27 GMT   |   Update On 2021-08-23 10:27 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டிகோர் இ.வி. எலெக்ட்ரிக் கார் விவரங்களை சமீபத்தில் வெளியிட்டது. வெளியீட்டை தொடர்ந்து டிகோர் இ.வி. மாடல் தற்போது விற்பனையகம் வரத்துவங்கி இருக்கிறது. அடுத்த வாரம் டிகோர் இ.வி. மாடலின் விலை அறிவிக்கப்பட இருக்கிறது.

டாடாவின் புதிய டிகோர் இ.வி. மாடலில் சிப்டிரான் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. சிப்டிரான் தொழில்நுட்பம் பயன்படுத்தும் இரண்டாவது கார் டிகோர் இ.வி. ஆகும். மேலும் இதில் உள்ள சிப்டிரான் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. 



மேம்பட்ட சிப்டிரான் தொழில்நுட்பம் கொண்ட புதிய டிகோர் இ.வி. மாடலில் 55 கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார், 26kWh லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இவை 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகின்றன. 

டிகோர் இ.வி. காரை முழுமையாக சார்ஜ் செய்ய 8.5 மணி நேரம் ஆகும். பாஸ்ட் சார்ஜிங் பயன்படுத்தினால் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 1 மணி நேரம் ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 250 கிலோமீட்டர் வரை செல்லும். 

முன்னதாக டாடா டிகோர் இ.வி. முன்பதிவு துவங்கியது. இந்தியாவில் டிகோர் இ.வி. மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும்.
Tags:    

Similar News