ஆட்டோமொபைல்
இலவச பெட்ரோல் வழங்கிய பருச் பெட்ரோல் மையம்

2 நாட்களுக்கு இலவச பெட்ரோல் - ஆனால் ஒரு கண்டிஷன்

Published On 2021-08-10 07:11 GMT   |   Update On 2021-08-10 07:11 GMT
டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் வெற்றியை பெட்ரோல் விற்பனையாளர் ஒருவர் வித்தியாசமாக கொண்டாடி இருக்கிறார்.


குஜராத் மாநிலத்தின் பருச் பகுதியை சேர்ந்த பெட்ரோல் விற்பனை மையத்தில் இரண்டு நாட்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கப்பட்டது. இலவச பெட்ரோல் அனைவருக்கும் வழங்காமல், நீரஜ் எனும் பெயர் கொண்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. 

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்று அசத்திய நீரஜ் சோப்ராவை பெருமைப்படுத்தும் விதமாக இந்த சலுகையை, பெட்ரோல் விற்பனை மையத்தின் முதலாளி அயுப் பதான் அறிவித்தார். இலவச பெட்ரோல் பெற, வாடிக்கையாளர் தங்களின் பெயர் இடம்பெற்றுள்ள அடையாள சான்றை காண்பிக்க வேண்டும். அடையாள சான்றில் நீரஜ் அல்லது சோப்ரா என இடம்பெற்று இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தது.



இரண்டு நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த சலுகை நேற்று (திங்கள் கிழமை) மாலையுடன் நிறைவுற்றது. இந்த சலுகையில் மொத்தம் 30 பேர் வரை பயனடைந்ததாக அயுப் பதான் தெரிவித்தார். நீரஜ் பெயர் கொண்ட ஒவ்வொருவருக்கும் ரூ. 501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ராவின் வெற்றியால் ஒட்டுமொத்த நாடும் பெருமை பெற்றுள்ளது. இவரின் வெற்றியை இந்திய குடிமக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் பலர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து செய்தி மற்றும் பரிசு அறிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா, நீரஜ் சோப்ராவுக்கு புத்தம் புதிய மஹிந்திரா XUV700 மாடலை பரிசாக வழங்குவதாக அறிவித்தார்.
Tags:    

Similar News