ஆட்டோமொபைல்
ஆட்டோ எக்ஸ்போ கோப்புப்படம்

இந்தியா ஆட்டோ எக்ஸ்போ ஒத்திவைப்பு - புதிய தேதிகள் விரைவில் அறிவிப்பு

Published On 2021-08-04 09:46 GMT   |   Update On 2021-08-04 09:46 GMT
2022 பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் துவங்க இருந்த இந்தியா ஆட்டோ எக்ஸ்போ விழா புதிய தேதிகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.


2022 இந்தியா ஆட்டோ எக்ஸ்போ விழா ஒத்திவைக்கப்படுகிறது. கொரோனாவைரஸ் தொற்றின் மூன்றாவது அலை அச்சம் காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை செய்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சம்மேளனம் தெரிவித்து இருக்கிறது. 



இந்தியாவில் நடைபெற்று வரும் மிகப்பெரும் ஆட்டோ நிகழ்வுகளில் ஒன்றாக இந்தியா ஆட்டோ எக்ஸ்போ இருக்கிறது. வழக்கமாக இவ்விழாவில் பெரும்பாலானோர் கலந்து கொள்வார்கள். இதுபோன்ற விழாவில் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது சற்றே சவாலான காரியம் என்பதால், தொற்று பரவும் அபாயம் அதிகம் ஆகும். 

முந்தைய அறிவிப்பின் படி 2022 இந்தியா ஆட்டோ எக்ஸ்போ விழா 2022 பிப்ரவரி 2 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெற திட்டமிடப்பட்டது. இவ்விழா கிரேட்டர் நொய்டாவில் நடைபெற இருந்தது. 
Tags:    

Similar News