ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி

ரூ. 18 ஆயிரம் கோடியில் புது உற்பத்தி ஆலை - மாருதி சுசுகி திட்டம்

Published On 2021-07-15 08:47 GMT   |   Update On 2021-07-15 08:47 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் புது உற்பத்தி ஆலை மிகப் பெரும் முதலீட்டில் உருவாகி வருகிறது.


மாருதி சுசுகி நிறுவனம் ஹரியானாவில் புது உற்பத்தி ஆலையை கட்டமைக்க திட்டமிட்டு உள்ளது. இந்த உற்பத்தி ஆலையை உருவாக்க மாருதி சுசுகி நிறுவனம் ரூ. 18 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது. இந்த ஆலையில் ஆண்டிற்கு 7.5 லட்சம் முதல் 10 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய முடியும்.

குருகிராமில் இயங்கி வரும் மாருதி ஆலையை இடமாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தால், புது ஆலை உருவாகிறது. 300 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வரும் குருகிராம் உற்பத்தி ஆலை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாகி இருக்கிறது. இது மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் உற்பத்தி ஆலை ஆகும். இந்த ஆலையில் இருந்தே மாருதி 800 முதல் மாடலாக வெளியானது.



குருகிராம் உற்பத்தி ஆலை 1983 முதல் செயல்பட்டு வருகிறது. இத்தனை ஆண்டுகளில் இப்பகுதி கணிசமான வளர்ச்சி பெற்று தற்போது அதிக நெரிசல் மிகுந்த நகரமாக மாறி இருக்கிறது. இதனால் இப்பகுதியில் உதிரி பாகங்களை எடுத்து செல்வது மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை ஆலையில் இருந்து வெளியே கொண்டு வருவது போன்ற செயல்பாடுகள் கடுமையாகி இருக்கின்றன. 

மேலும் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு இந்த ஆலை தொந்தரவாக இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் நினைக்கின்றனர். இந்த ஆலையில் தற்போது ஆல்டோ, வேகன் ஆர் போன்ற மாடல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலை ஆண்டிற்கு 7 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது.
Tags:    

Similar News