ஆட்டோமொபைல்
ஸ்கோடா கார்

நாடு முழுக்க புதிய விற்பனை மையங்களை திறக்கும் ஸ்கோடா

Published On 2021-07-11 03:32 GMT   |   Update On 2021-07-11 03:32 GMT
ஸ்கோடா நிறுவனம் நாடு முழுக்க புதிய விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் நாடு முழுக்க சுமார் 30 விற்பனை மையங்களை அடுத்த ஆறு மாதங்களில் திறக்க திட்டமிட்டு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனை மையங்கள் எண்ணிக்கையை 150 ஆக அதிகரிக்க ஸ்கோடா முடிவு செய்துள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும் 14 விற்பனை மையங்களை திறக்க ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆகஸ்டு, அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மேலும் 16 விற்பனை மையங்களை படிப்படியாக திறக்க இருக்கிறது.



இதுதவிர ஸ்கோடா நிறுவனம் விரைவில் பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் கோடியக் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் 2 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து புதிய மிட்-சைஸ் செடான் மாடலையும் அறிமுகம் செய்ய ஸ்கோடா திட்டமிட்டு இருக்கிறது.
Tags:    

Similar News