ஆட்டோமொபைல்
ஆடி இ டிரான்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 448 கிமீ செல்லும் ஆடி எலெக்ட்ரிக் எஸ்யுவி

Published On 2021-06-29 09:42 GMT   |   Update On 2021-06-29 09:42 GMT
ஆடி நிறுவனத்தின் இ டிரான் எஸ்யுவி மற்றும் ஸ்போர்ட்பேக் மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கியது.


ஆடி நிறுவனம் தனது இ டிரான் எஸ்யுவி மற்றும் ஸ்போர்ட்பேக் மாடல்களுக்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இரு மாடல்களுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 5 லட்சம் ஆகும். முன்பதிவு ஆடி வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இந்திய சந்தையில் ஆடி இ டிரான் மாடல் ஜூலை 22 ஆம் தேதி அறிமுகமாகிறது.

இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்படுகின்றன. எனினும், இவற்றின் டிசைன் சற்றே வேறுப்பட்டு இருக்கும். இந்தியாவில் புதிய இ டிரான் எஸ்யுவி துவக்க விலை ரூ. 1 கோடி, எக்ஸ்-ஷோரூம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஆடி இ  டிரான் மாடலில் 125kW மற்றும் 140kW என இரு எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்படுகின்றன. இவை இணைந்து 408 பிஹெச்பி பவர், 664 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. எலெக்ட்ரிக் மோட்டார்கள் 95kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்டு இயக்கப்படுகிறது.

இந்த பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 448 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. டிசி பாஸ்ட் சார்ஜர் கொண்டு இதில் உள்ள பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே ஆகிறது. ஸ்போர்ட்ஸ் மோடில் இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 5.7 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் அதிகபட்சம் 200 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
Tags:    

Similar News