ஆட்டோமொபைல்
போர்ஸ் குர்கா இந்திய வெளியீட்டு விவரம்
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் குர்கா ஆப்-ரோடு எஸ்யுவி மாடல் அந்த மாதத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய தலைமுறை குர்கா ஆப்-ரோடு எஸ்யுவி மாடலின் வெளியீட்டை உணர்த்தும் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி புதிய குர்கா எஸ்யுவி மாடல் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகிறது.
புதிய போர்ஸ் குர்கா மாடல் பண்டிகை காலக்கட்டத்திற்கு முன் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. புதிய போர்ஸ் குர்கா எஸ்யுவி மஹிந்திரா தார் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. மஹிந்திரா தார் மாடல் கடந்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் போர்ஸ் குர்கா காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த எஸ்யுவி மாடலில் பிஎஸ்6 ரக 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படலாம்.