ஆட்டோமொபைல்
இப்படி செய்தா கொரோனா பரவல் குறையும் - ஹூண்டாய் எடுத்த திடீர் முடிவு
கொரோனாவைரஸ் தொற்று பரவல் காரணமாக உற்பத்தி ஆலை பணி திட்டத்தை மாற்றிய ஹூண்டாய்.
ஹூண்டாய் நிறுவனம் தனது சென்னை ஆலையில் மூன்றாவது ஷிப்ட் பணிகளை நிறுத்தி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 31 முதல் ஜூன் 19 ஆம் தேதி வரை மூன்றாவது ஷிப்ட் பணிகளை ஹூண்டாய் நிறுத்தி உள்ளது.
ஒரு ஷிப்ட் பணிகளை நிறுத்துவதன் மூலம் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் என்றாலும், இதன் மூலம் கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைக்க முடியும். முன்னதாக சென்னை உற்பத்தி ஆலை ஒரு வார காலத்திற்கு முழுமையாக மூடப்பட்டு இருந்தது.
ஊரடங்கு காரணமாக பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலையை மூடின. ஆலையை மூடியதால் ஆக்சிஜன் விநியோகம் செய்யும் நிறுவனங்கள், தங்களின் முழு ஆக்சிஜனையும் கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளுக்கு வழங்கின.