ஆட்டோமொபைல்
லம்போர்கினி கார்

பெருந்தொற்று காலக்கட்டத்திலும் கோடிகளை கொட்டிக்கொடுக்கும் கோடீஸ்வரர்கள்

Published On 2021-06-01 09:18 GMT   |   Update On 2021-06-01 09:18 GMT
உலகில் கொரோனா தொற்று பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பெரும் பணக்காரர்கள் அதை வாங்க கோடிகளை கொட்டிக்கொடுக்கின்றனர்.

கொரோனா பெருந்தொற்றில் இருந்து உலகின் பல்வேறு நாடுகள் மீண்டு வரத்துவங்கி உள்ளன. இந்த நிலையில், ஆடம்பர வாகனங்கள் விற்பனை இதுவரை இல்லாத அளவு அதிகரித்து இருக்கிறது. லம்போர்கினி, பெராரி மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் என முன்னணி நிறுவனங்கள் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு வாகனங்கள் விற்பனை பெரும் சரிவை சந்தித்தது. உலகின் பெரும் பணக்காரர்களுக்கு இருந்த ஒரே கவலை, வெளியில் பழையபடி சுற்ற முடியாதது தான். இவர்கள் தங்களின் செலவீனங்களை ஒத்திவைத்தனர் என சந்தை ஆய்வு நிறுவனத்தின் பெலிப் முனோஸ் தெரிவித்தார். 



2020 இறுதி காலாண்டில் ஆடம்பர கார்களின் விற்பனை அதிகரிக்க துவங்கியது. வோக்ஸ்வேகன் குழுமத்தின் லம்போர்கினி நிறுவனம் தனது வரலாற்றிலேயே முதல் முறையாக 2019 ஆண்டில் 7430 வாகனங்களை விற்பனை செய்தது. இத்தாலி நாட்டை சேர்ந்த லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் எஸ்யுவி மாடல் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.

இதே போன்று மற்ற முன்னணி நிறுவன மாடல்களும் இதுவரை இல்லாத அளவு முன்பதிவு செய்யப்படுகின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் ஆடம்பர வாகனங்கள் விற்பனை வெகுவாக அதிகரிக்க துவங்கி உள்ளது.
Tags:    

Similar News