ஆட்டோமொபைல்
நிசான்

கொரோனா வந்திடும் - அச்சம் காரணமாக பணி செய்ய மறுத்த ஊழியர்கள்

Published On 2021-05-31 08:39 GMT   |   Update On 2021-05-31 08:39 GMT
கொரோனா அச்சம் காரணமாக ரெனால்ட் - நிசான் நிறுவன ஊழியர்கள் பணிக்கு வர மறுத்துள்ளனர்.


ரெனால்ட் - நிசான் ஆலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் கொரோனா அச்சம் காரணமாக பணிக்கு வரமாட்டோம் என தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நிறுவனத்திற்கு ஊழியர்கள் நலசங்க தலைவர் கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. 



கொரோனா அச்சம் காரணமாக மே 31 ஆம் தேதி பணிக்கு வருவது ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்காது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முன்னதாக போர்டு மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்படும் ஆலை பணிகளை ஒரு வாரத்திற்கு நிறுத்துவதாக கடந்தவாரம் அறிவித்தன. 

ஊழியர்கள் தரப்பு வாதம் குறித்து நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையை சுற்றி பணியாற்றி வரும் சுமார் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News