ஆட்டோமொபைல்
ஹூண்டாய்

தமிழக அரசுக்கு 50 ஆக்சிசன் செறிவூட்டிகளை வழங்கிய ஹூண்டாய்

Published On 2021-05-28 09:10 GMT   |   Update On 2021-05-28 09:10 GMT
ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியது.


ஹூண்டாய் நிறுவனம் தமிழக அரசுக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது. தமிழகத்தை கொரோனா தொற்றில் இருந்து மீட்க ஹூண்டாய் தொடர்ந்து உதவிகளை செய்து ஆதரவளித்து வருகிறது. மருத்துவ உபகரணம் ஸ்ரீபெரும்புதூர் ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமாரிடம் வழங்கப்பட்டது.



காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் தெரிவித்தார். இந்த முயற்சி ஹூண்டாய் கேர்ஸ் 3.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதனை ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுன்டேஷன் துவங்கியது.

ஹூண்டாய் கேர்ஸ் 3.0 முயற்சியின் கீழ் பேக் டு லைப் எனும் திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான மருத்துவ உபகரணங்களை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது இந்தியா முழுக்க பாதிப்பு நிறைந்த மாநிலங்களை மீட்க உதவியாக இருக்கும்.
Tags:    

Similar News