ஆட்டோமொபைல்
நிசான்

ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்து உற்பத்தியை நிறுத்திய ரெனால்ட், நிசான்

Published On 2021-05-26 11:43 IST   |   Update On 2021-05-26 11:43:00 IST
தமிழகத்தில் இயங்கி வந்த ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் உற்பத்தி ஆலை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆட்டோ உற்பத்தியாளரான ரெனால்ட் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மோட்டார் நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வந்த உற்பத்தி ஆலையை மூடுவதாக அறிவித்து இருக்கின்றன. 

முன்னதாக கொரோனா தொற்று மற்றும் கடும் ஊரடங்கு காரணமாக பணி செய்ய இயலாது என ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ரெனால்ட்-நிசான் உற்பத்தி ஆலை சென்னை அருகில் அமைந்துள்ளது.



இந்த ஆலை பணிகள் மே 30 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆலை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய துவங்கி இருப்பதால், அடுத்த வாரத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மூடப்பட்டு இருக்கும் ஆலையில் இந்நிறுவனங்களின் பிளாக்ஷிப் மாடல்களான நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் எஸ்யுவி உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன.

Similar News