ஆட்டோமொபைல்
இலவச சர்வீஸ் சேவையை நீட்டித்த கியா இந்தியா
கியா இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு வழங்கிய இலவச சர்வீஸ் சேவை பயனற்று போவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
கியா இந்தியா நிறுவனம் இலவச சர்வீஸ் சேவையை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து இருக்கிறது. கொரோனாவைரஸ் ஊரடங்கு காரணமாக இலவச சர்வீஸ் சேவை பயனற்று போவதை தடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பை கியா இந்தியா வெளியிட்டு இருக்கிறது.
ஊழியர்களை பாதுகாக்கும் நோக்கில் நாடு முழுக்க அனைத்து கியா விற்பனையாளர்களும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. இதன் காரணமாக சர்வீஸ் மையங்கள் மிக குறைந்த பணியாளர்களுடன் செயல்பட்டு வருவகிறது. சில சர்வீஸ் மையங்கள் ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ளன.
ஊரடங்கு காரணமாக இலவச சர்வீஸ் சேவை கொண்ட வாகனங்களை சர்வீஸ் மையங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு சிரம் அற்ற சேவையை வழங்கும் நோக்கில் இலவச சர்வீஸ் சேவை இரண்டு மாதங்களுக்கு நீட்டித்து இருக்கிறது.