ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி கார்

ஆலை பணிகளை மே 16 வரை நிறுத்திய மாருதி சுசுகி

Published On 2021-05-11 08:27 GMT   |   Update On 2021-05-11 08:27 GMT
மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி பணிகளை அதிகப்படுத்த திட்டமிட்டு இருக்கிறது.


மாருதி சுசுகி நிறுவனம் தனது ஆலைகளை மே 16 ஆம் தேதி வரை மூடுவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலை மே 1 துவங்கி மே 9 வரை மூடப்படுவதாக மாருதி சுசுகி இருந்தது. இந்த காலக்கட்டத்தில், ஆலையில் கார் உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவதோடு, ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறும் என மாருதி சுசுகி தெரிவித்தது.



தற்போது ஆலையில் உற்பத்தி பணிகளை மே 16 ஆம் தேதி வரை நிறுத்தி, இந்த காலக்கட்டத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகப்படுத்த மாருதி சுசுகி திட்டமிட்டு இருக்கிறது. இதற்கென மாருதி சுசுகி நிறுவனம் என்சிஆர் பகுதியை சேர்ந்த இரு நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

கடந்த மாதம் வாகனங்கள் விற்பனையில் சரிவடைந்த போதும் மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளராக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் அதிகம் விற்பனையான பத்து கார்களில் ஏழு மாருதி சுசுகி மாடல்கள் இடம்பெற்று இருந்தன.
Tags:    

Similar News