ஆட்டோமொபைல்
புது சீரிஸ் காருக்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்த டொயோட்டா
டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சீரிஸ் கார்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளை துவங்கி உள்ளது.
டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புது மாடல்களுக்கு BZ பெயர்களை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி விண்ணப்பித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் மத்திய வர்த்தகம் மற்றும் காப்புரிமை பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது.
டொயோட்டாவின் புது BZ சீரிஸ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கானது ஆகும். டொயோட்டா BZ சீரிசில் 2025 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் ஏழு புதிய எலெக்ட்ரிக் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. சமீபத்தில் டொயோட்டா BZ4X கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது BZ சீரிசில் முதல் மாடல் ஆகும்.
இந்திய சந்தையில் பயன்படுத்த BZ, BZ, BZ1X, BZ2, BZ2X, BZ3, BZ3X, BZ4, BZ4X, BZ5 மற்றும் BZ5X போன்ற பெயர்களுக்கு பதிவு செய்துள்ளது. இவை கடந்த ஆண்டு மே முதல் அக்டோபர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் விண்ணப்பிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுக்கான கால அவகாசம் 2030 வரை பொருந்தும்.