ஆட்டோமொபைல்
2021 ஸ்கோடா ஆக்டேவியா

2021 ஸ்கோடா ஆக்டேவியா வெளியீட்டில் திடீர் மாற்றம்

Published On 2021-04-23 08:30 GMT   |   Update On 2021-04-23 08:30 GMT
ஸ்கோடா நிறுவனத்தின் மூன்று புது எஸ்யுவி மாடல்கள் வெளியீடு திட்டமிட்டப்படி நடைபெறாது என தகவல் வெளியாகி உள்ளது.


ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் 2021 ஆக்டேவியா மாடலை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வந்தது. இம்மாதம் அறிமுகமாக இருந்த நிலையில், 2021 ஸ்கோடா ஆக்டேவியா வெளியீடு ஓத்துவைக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு பெருமளவு அதிகரித்து வருவதால், இதன் வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக ஸ்கோடா ஆட்டோ இந்தியா விற்பனை, விளம்பரம் மற்றும் சர்வீஸ் பிரிவு இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் தெரிவித்து இருக்கிறார்.

`சமயங்களில் சிறு இடைவெளி எடுத்துக் கொண்டு, உறுதியுடன் வருவது மிகவும் அவசியமானது. ஸ்கோடா ஆட்டோ புதிய ஆக்டேவியா வெளியீட்டை தற்போதைய நிலைமை மாறும் வரை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. வெளியீடு சார்ந்த திட்டங்களை தொடர்ந்து தெரிவிப்போம். பாதுகாப்பாக இருந்து, வைரஸ் தொற்றை எதிர்த்து ஒன்றாக பாடுபடுவோம்.' என ஜாக் ஹாலிஸ் தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
Tags:    

Similar News