ஆட்டோமொபைல்
சிஎன்ஜி வாகன விற்பனையில் புது மைல்கல் எட்டிய மாருதி சுசுகி
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்த எஸ்-சிஎன்ஜி ரக வாகன விவரங்களை வெளியிட்டுள்ளது.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய சந்தையில் 2020-21 நிதியாண்டில் மட்டும் 1.57 லட்சம் எஸ்-சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. எஸ்-சிஎன்ஜி வாகன விற்பனையில் இது மற்ற நிறுவனங்கள் இதுவரை எட்டாத மைல்கல் ஆகும்.
தற்போது ஆல்டோ, செலரியோ, வேகன்ஆர், எஸ் பிரெஸ்ஸோ, இகோ, எர்டிகா மற்றும் டூர் எஸ் போன்ற மாடல்களில் மாருதி சுசுகி சிஎன்ஜி வசதியை வழங்குகிறது. பயணிகள் வாகனங்கள் மட்டுமின்றி சூப்பர் கேரி வர்த்தக வாகனத்திலும் இதே வசதியை மாருதி சுசுகி வழங்கி வருகிறது.
2016-17 மற்றும் 2017-18 நிதியாண்டில் மட்டும் மாருதி சுசுகி நிறுவனம் 70 ஆயிரம் எஸ் சிஎன்ஜி கார்களை விற்பனை செய்தது. பின் இரண்டு நிதியாண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சம் யூனிட்களாக அதிகரித்தது.