ஆட்டோமொபைல்
கேடிஎம் ஆர்சி 390

இந்தியாவில் சோதனை செய்யப்படும் கேடிஎம் ஆர்சி 390

Published On 2021-03-30 08:51 GMT   |   Update On 2021-03-30 08:51 GMT
கேடிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.


கேடிஎம் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆர்சி சீரிஸ் மாடல்களை உருவாக்கும் பணிகளில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகிறது. முன்னதாக இந்த மாடல் ஸ்பை படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், தற்போது புதிய ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளன.

அதன்படி புதிய கேடிஎம் ஆர்சி 390 உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயாராகி விட்டதாக தெரிகிறது. இந்த மாடல் அசத்தலான டிசைன், மேம்பட்ட குஷன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. மேலும் இந்த மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



2021 கேடிஎம் ஆர்சி 390 மாடலில் புதிய முன்புறம் தோற்றம் பெறுகிறது. டூயல் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் தற்போது பெரிய எல்இடி ஹெட்லேம்ப்களாக மாறி டூயல்-ப்ரோஜக்டர்களை கொண்டிருக்கிறது. இதன் பேரிங்கும் முன்பு இருந்ததை விட வித்தியாசமாக மாற்றப்பட்டு சற்று கூர்மையாக காட்சியளிக்கிறது.

புதிய ஆர்சி  390 மாடலில் 373.2 சிசி, சிங்கில் சிலிண்டர், பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட மோட்டார் வழங்கப்படுகிறது. இது 44 பிஹெச்பி பவர், 36 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 2021 ஆர்சி 200 மாடலில் பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட 199 சிசி என்ஜின் வழங்கப்படுகிறது. இது 25 பிஹெச்பி பவர், 19.2 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News