ஆட்டோமொபைல்
வால்வோ எலெக்ட்ரிக் கார்

ஆண்டுக்கு ஒன்று - இந்தியாவில் புது திட்டம் தீட்டும் வால்வோ

Published On 2021-03-09 08:49 GMT   |   Update On 2021-03-09 08:49 GMT
வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் ஆண்டுக்கு ஒன்று விகிதத்தில் அசத்தலான திட்டத்தை அமலாக்க இருக்கிறது.


வால்வோ இந்தியா நிறுவனம் 2021 முதல் ஆண்டுக்கு ஒரு எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இத்துடன் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய சந்தையில் வால்வோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் ஆகும்.



இந்தியாவில் 2025 ஆண்டின் மொத்த விற்பனையில் 80 சதவீதம் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்க வேண்டும் என வால்வோ தெரிவித்து இருக்கிறது. இந்த இலக்கை எட்டும் நோக்கில் பல்வேறு வடிவமைப்புகளில் எலெக்ட்ரிக் கார்களை வால்வோ அறிமுகம் செய்ய இருக்கிறது.

தற்போது எக்ஸ்சி90 பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் வால்வோ எலெக்ட்ரிக் மாடல்கள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News