ஆட்டோமொபைல்
விற்பனையகம் வந்தடைந்த ரெனால்ட் கைகர்
ரெனாலாட் நிறுவனத்தின் புதிய கைகர் மாடல் கார் விற்பனையகம் வந்தடைந்துள்ளது.
ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் தனது கைகர் பி-எஸ்யுவி மாடலின் சர்வதேச வெளியீட்டை சமீபத்தில் இந்தியாவில் செய்தது. வரும் மாதங்களில் புதிய ரெனால்ட் கைகர் விற்பனை இந்தியாவில் துவங்க இருக்கிறது. புதிய கைகர் மாடலில் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் புதிய ரெனால்ட் கைகர் மாடல் விற்பனையகம் வந்தடைந்து உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி முதற்கட்டமாக ரெனால்ட் கைகர் டாப் எண்ட் மாடல் விற்பனையகம் வந்துள்ளது.
புதிய கைகர் மாடலில் அதிக செயல்திறன் மற்றும் சிறந்த டிரைவிங் அனுபவத்துக்காக டர்போசார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. மேலும் இந்த காரில் மல்டிசென்ஸ் டிரைவ் முறைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.
காரின் உட்பகுதியில் ஸ்மார்ட் கேபின் உள்ளது. அதனைத்தவிர தொழில்நுட்பம், செயல்பாடு மற்றும் அதிக இடவசதியிலும் தனித்துவம் கொண்ட காராக இருக்கிறது.