ஆட்டோமொபைல்
2021 மஹிந்திரா எக்ஸ்யுவி500

அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாகும் எக்ஸ்யுவி500

Published On 2020-10-13 07:58 GMT   |   Update On 2020-10-13 07:58 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்யுவி500 மாடல் அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்யுவி500 மாடல் அதிநவீன டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இது அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.

அடுத்த தலைமுறை மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் புதிய எக்ஸ்யுவி500 அதிநவீன தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.



மேம்பட்ட டிரைவர் அசிஸ்டண்ட் சிஸ்டம் மட்டுமின்றி அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிரண்டல் கொலிஷன் வார்னிங், லேண் டிபாச்சர் வார்னிங் மற்றும் ஆட்டோனோமஸ் எமர்ஜன்சி பிரேக்கிங் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது.
Tags:    

Similar News