ஆட்டோமொபைல்
மோட்டார்சைக்கிள்

2021 டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா ரத்து

Published On 2020-10-01 15:45 IST   |   Update On 2020-10-01 15:48:00 IST
2021 டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

 
48-வது டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா 2021 வசந்த காலத்தில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது.

எனினும், உலகில் கொரோனாவைரஸ் அச்சம் இன்னும் முழுமையாக தீராததால், 2021 டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழாவை ரத்து செய்தென டோக்கோ மோட்டார்சைக்கிள் விழா கூட்டமைப்பு முடிவு எடுத்து இருக்கிறது.



அடுத்த டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா 2022 ஆண்டில் நடத்த விழா ஏற்பட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். உலகளவில் மிகப்பெரும் மோட்டார்சைக்கிள் நிகழ்வாக டோக்கியோ மோட்டார்சைக்கிள் விழா பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் அறிமுகம் செய்வதற்கென ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தங்களின் பெரிய மாடல்கள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மிக முக்கிய வெளியீடுகளை திட்டமிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

Similar News