ஆட்டோமொபைல்
மஹிந்திரா முகக்கவசம்

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் புதிய முகக்கவசம் உருவாக்கும் மஹிந்திரா

Published On 2020-04-01 11:46 GMT   |   Update On 2020-04-01 11:46 GMT
முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் புதிய முகக்கவசங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.



ஒட்டுமொத்த உலகையே கொரோனா வைரஸ் பாதிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் கடந்த சில நாட்களாக இந்தியாவே முடங்கி இருக்கிறது. நாட்டில் மாஸ்க், குளோவஸ் மற்றும் இதர உடல்நல பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் தனிப்பட்ட ஆரோக்கிய பொருட்களை உள்நாட்டிலேயே உருவாக்கவும், வெளிநாடுகளில் இருந்து உபகரணங்களை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டு இருக்கிறது. இந்நிலையில், மஹிந்திரா நிறுவனம் மருத்துவ ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுக்கும் முகக்கவசங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.



இதற்கென வடிவமைக்கப்பட்டு இருக்கும் பிரத்யேக முகக்கவசங்கள் மஹிந்திரா நிறுவனத்தின் மும்பை கண்டிவலி பகுதியில் உள்ள ஆலையில் உருவாக்கப்படுகின்றன. முதற்கட்டமாக நாள் ஒன்றுக்கு 500 முகக்கவசங்கள் உருவாக்கப்பட்டு பின் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

இதுபற்றிய தகவல்களை மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். 

ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் வடிவமைப்பில் உருவாகி இருக்கும் முகக்கவசங்களின் உற்பத்தி பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது. முதற்கட்டமாக 500 முகக்கவசங்களை உற்பத்தி செய்து பின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் என மஹிந்திரா நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் பவன் கோயென்கா தெரிவித்தார்.
Tags:    

Similar News