ஆட்டோமொபைல்
மஹிந்திரா நிறுவன குழு

48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி மஹிந்திரா

Published On 2020-03-27 12:04 GMT   |   Update On 2020-03-27 12:04 GMT
மஹிந்திரா நிறுவனம் 48 மணி நேரத்தில் வென்டிலேட்டர் ப்ரோடோடைப் உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.



கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொண்டு வரும் மருத்துவமனை மற்றும் சுகாதார மையங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளில் ஈடுபட இருப்பதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்து இருந்தார்.

அந்த வகையில் முதற்கட்ட வென்டிலேட்டர் ப்ரோடோடைப்களை மஹிந்திரா நிறுவன குழுவினர் உருவாக்கி இருப்பதாக அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் தெரிவித்து இருக்கிறார். மேலும் இதனை செய்து முடிக்க 48 மணி நேரங்களே ஆனதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

பல மணி நேர ஆய்வுக்கு பின் இது சாத்தியமானதாக இதனை உருவாக்கிய குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். வென்டிலேட்டர் உருவாக்கும் பணிகளின் போது எடுக்கப்பட்ட வீடியோவினை ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் பதிவிட்டு இருக்கிறார்.



முதற்கட்ட வென்டிலேட்டர் ப்ரோடோப்களை தொடர்ந்து மேலும் மூன்று ப்ரோடோடைப் மாடல்களை மும்பை மற்றும் இகத்பூரில் உள்ள குழுவினர் மேற்கொள்ள இருக்கின்றனர். மூன்று புதிய ப்ரோடோப்களை அடுத்த மூன்று நாட்களில் செய்துமுடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. 

மஹிந்திரா நிறுவன குழுவினர் மேற்கொள்ளும் வென்டிலேட்டர்களுக்கான கட்டணம் ரூ. 7500 என ஆனந்த் மஹிந்திரா தெரிவித்து இருக்கிறார். வழக்கமாக வென்டிலேட்டர்களை உருவாக்க ஐந்து முதல் பத்து லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News