ஆட்டோமொபைல்
மஹிந்திரா

மஹிந்திரா என்ஜினுடன் உருவாகும் ஃபோர்டு கார்

Published On 2020-03-04 16:12 IST   |   Update On 2020-03-04 16:12:00 IST
மஹிந்திரா நிறுவன என்ஜினுடன் உருவாகும் ஃபோர்டு கார் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



மஹிந்திரா மற்றும் ஃபோர்டு நிறுவனங்களிடையே 2017-ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, இரு நிறுவனங்களிடையே கனெக்ட்டெட் வெஹிகில் தொழில்நுட்பம், எலெக்ட்ரிக் மற்றும் வாகனங்களை உருவாக்குவது போன்ற பணிகளில் இணைந்து செயல்பட இருநிறுவனங்களும் திட்டமிட்டன.

அந்த வகையில் இரு நிறுவனங்களிடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் கீழ் வெளியாகும் முதல் வாகனமாக ஃபோர்டு இகோஸ்போர்ட் உருவாகி இருக்கிறது. இந்த காரில் மஹிந்திரா நிறுவனத்தின் என்ஜின் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 



புதிய இகோஸ்போர்ட் காரில் மஹிந்திரா நிறுவனத்தின் 1.2 லிட்டர் டி ஜி.டி.ஐ. என்ஜின் வழங்கப்படுகிறது. இது தற்சமயம் பயன்படுத்தப்படும் 1.0 லிட்டர் இகோபூஸ்ட் என்ஜினுக்கு மாற்றாக அமைகிறது. 1.2 லிட்டர் டி ஜி.டி.ஐ. பெட்ரோல் என்ஜின் மஹிந்திராவின் எம் ஸ்டாலியன் பிரிவை சேர்ந்தது ஆகும்.

ஜி12 எனும் குறியீட்டு பெயரில் உருவாகும் புதிய பி.எஸ்.6 என்ஜின் 130 பி.ஹெச்.பி. பவர், 230 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. எனினும், ஃபோர்டு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் ஆப்ஷன் கொண்டிருக்கிறது.

Similar News