வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை
14.9.2025 முதல் 20.9.2025 வரை
மனோபலத்தால் நன்மைகள் அதிகரிக்கும் வாரம். உச்சமடைந்த ராசி அதிபதி புதன் சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறார். வெளி நாட்டில் வாழ்பவர்கள் எதிர்பார்த்த குடியுரிமை கிடைக்கும். வரவை விட செலவு அதிகரிப்பதால் எதிர்காலம் பற்றிய அச்சம் அதிகரிக்கும். சுப விரயச் செலவுகள் மிகுதியாகும். புதிய வீடு, வாகனத்திற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது.
தொழிலில் சகோதரர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். புதிய தொழில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்து சர்ச்சையில் தாய்மாமன் ஆதரவாக இருப்பார். சமுதாய அந்தஸ்து நிறைந்த நல்ல வேலை கிடைக்கும். இளம் வயதினருக்கு புத்திர பிராப்தம் கிடைக்கும். தெய்வ கடாட்சம் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல் மற்றும் அலுப்பு குறையும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சற்று இழுபறியாகும். வாழ்க்கையை இழந்த ஆண், பெண்களுக்கு மறுமணம் நடக்கும். மகாளய பட்ச காலத்தில் கன்னிப் பெண்களுக்கு ஆடை தானம் வழங்க கன்னிப் பெண் சாபம் விலகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406