ராசிபலன்
null

Today Rasipalan: இன்றைய ராசிபலன்-28.07.2025

Published On 2025-07-28 05:38 IST   |   Update On 2025-07-29 07:34:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம்

தொழில் வளர்ச்சி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். குடும்பத்தினர்களின் ஆதரவு உண்டு. கொடுத்த பாக்கிகள் வசூலாகும். பயணம் பலன் தரும்.

ரிஷபம்

கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். உறவினர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

மிதுனம்

அலைச்சல் கூடும் நாள். உறவினர்கள் பணம் கேட்டுத் தொல்லை தரலாம். பாகப் பிரிவினைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிக பணிச்சுமையை வழங்குவர்.

கடகம்

விரயங்கள் கூடும் நாள். கூட்டுத் தொழிலை தனித் தொழிலாக மாற்ற முயற்சிப்பீர்கள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பலன் தரும். விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் கையாளவும்.

சிம்மம்

இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். எதிரிகளின் பலம் குறையும். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.

கன்னி

அதிகாலையிலேயே அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். நண்பர்களின் சந்திப்பால் நல்ல சம்பவமொன்று நடைபெறும். உத்தியோகத்தில் உங்களுக்குப் பிடித்தமான இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.

துலாம்

நிதி நிலை உயரும் நாள். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். உத்தியோகத்தில் காசோலை சம்பந்தமாக கவனம் தேவை.

விருச்சிகம்

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைக்கும். வருமானம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகவே இருக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.

தனுசு

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புனித யாத்திரைகள் செல்வதில் கவனம் செலுத்துவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.

மகரம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டு விடும் சூழ்நிலை உருவாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. சேமிப்பில் சிறிது கரையும்.

கும்பம்

குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி தாமதப்படும். உடன்பிறப்புகள் வழியே விரயம் உண்டு.

மீனம்

பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை விலகும் நாள். உடல்நலம் சீராகும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதற்கான அறிகுறி தோன்றும்.

Tags:    

Similar News