ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் 3.12.2025 - இந்த ராசிக்காரர்களுக்கு திருமண வாய்ப்பு கைகூடும்

Published On 2025-12-03 07:36 IST   |   Update On 2025-12-03 07:36:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உத்தியோக முயற்சி அனுகூலம் தரும்.

ரிஷபம்

தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு உண்டு.

மிதுனம்

யோகமான நாள். அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் உண்டு. செல்வாக்கு மேலோங்கும்.

கடகம்

முன்னேற்றம் அதிகரிக்க முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.

சிம்மம்

எதிர்காலம் இனிமையாக அமைய எடுத்த முயற்சிகள் வெற்றி தரும் நாள். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். திருமண வாய்ப்பு கைகூடும்.

கன்னி

யோசித்து செயல்பட வேண்டிய நாள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கை கொடுக்கும். உணர்ச்சி வசப்படுவதன் மூலம் உறவினர் பகை ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும்.

துலாம்

மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். தேவைகளுக்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டு. திட்டமிட்ட செயலொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள்.

விருச்சிகம்

வெற்றிகள் குவிய வேலவனை வழிபட வேண்டிய நாள். பக்கத்தில் உள்ளவர்களால் பக்கபலமாக இருப்பர். பணவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

தனுசு

பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும்.

மகரம்

குறைகள் அகலக் குகனை வழிபட வேண்டிய நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். வீட்டைச் சீரமைக்கும் பணி தொடரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்பம்

அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். தன்னம்பிக்கையோடும் செயல்படுவீர்கள். பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள்.

மீனம்

இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள்கொடுத்து உதவ முன்வருவர். நண்பர்களால் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். வீடு கட்டும் முயற்சி பலன் தரும்.

Tags:    

Similar News