ராசிபலன்

Today Rasipalan: இன்றைய ராசிபலன் - 16.09.2025

Published On 2025-09-16 07:46 IST   |   Update On 2025-09-16 07:46:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத் தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்

வளர்ச்சி கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். பொருளாதார முன்னேற்றம் கருதி நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். விற்ற சொத்துகளை வாங்கும் யோகமுண்டு.

மிதுனம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். பணப்பற்றாக்குறை அகலும். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உடல்நலம் சீராகும்.

கடகம்

சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கைகூடி வரும். உங்கள் யோசனைகளை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவர்.

சிம்மம்

வளர்ச்சி அதிகரிக்கும் நாள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். உடல்நலன் கருதி மருத்துவ செலவுகளைச் செய்ய நேரிடும்.

கன்னி

தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்கு செய்துகொள்ள முன்வருவீர்கள்.

துலாம்

புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். புனிதப் பயணங்கள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.

விருச்சிகம்

யோசித்து செயல்பட வேண்டிய நாள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம். விரயங்கள் கூடும்.

தனுசு

சிந்தித்து செயல்படுவதன் மூலம் சிறப்புகள் வந்து சேரும் நாள். வரவை விடச் செலவு கூடும். சகோதர வழியில் பிரச்சனைகள் உருவாகும். பஞ்சாயத்துகள் முடிவடையாது.

மகரம்

பிள்ளைகள் வழியில் நல்ல காரியம் நடைபெறும் நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.

கும்பம்

எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் நாள். கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கலாம். அக்கம், பக்கத்தினரின் ஆதரவு உண்டு. சம்பள உயர்வுடன் கூடிய புதிய உத்தியோகம் வரலாம்.

மீனம்

வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். பழுதாகிக் கிடந்த வாகனத்தைப் புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அலைபேசி மூலம் சுபச் செய்திகள் வந்து சேரலாம்.

Tags:    

Similar News