தனுசு - ஆண்டு பலன் - 2024

ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

Published On 2022-12-25 08:06 GMT   |   Update On 2022-12-25 08:06 GMT

தன்னம்பிக்கையான தனுசு ராசியினருக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.ஏழரைச் சனி காலத்தில் சந்தித்த சோதனைகள் சாதனைகளாக மாறும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் துரிதமாகும். முன்னேற்றத்திற்கான பாதை தென்படும். நேர்மை உங்களை சுமூகமாக வழி நடத்தும். புதிய திட்டங்கள் தீட்டி சவாலான செயல்களையும் சாமர்த்தியமாக செய்து முடிப்பீர்கள். உங்களின் திறமை வெளிப்படும். வருட கிரகங்கள் அனைத்தும் ஒரளவு சாதகமாக இருப்பதால் கோபத்தை குறைத்து நம்பிக்கையோடு முயற்சித்தால் காரிய சித்தியுடன் நிம்மதியும் நிலைக்கும். இந்த புத்தாண்டிற்கான விரிவான பலன்களைக் காணலாம்.

குருவின் சஞ்சார பலன்கள்:

ராசி அதிபதி மற்றும் நான்காம் அதிபதியான குருபகவான் ஏப்ரல் 22, 2023 வரை நான்காம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். அதன் பிறகு 5மிடம் சென்று ராகுவுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார். பொருளாதாரம் சீராக இருக்கும். வரவும் செலவும் சமனாகும். சிலர் வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் என பல்வேறு மாற்றத்தையும், ஏற்றத்தையும் சந்திப்பார்கள். தொழில் உத்தியோகத்தில் ஆதாயமும், அனுகூலமும் உண்டாகும்.குருவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக இருப்பதால் பூப் புனித நீராட்டு விழா, திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.

வீடு, வாகனம் போன்ற சுபச் செலவு ஏற்படலாம். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் ஆறு மாதம் வேலை பார்பார்கள் , சிலர் வேலைபிடிக்கவில்லை என்று சொந்த தொழில் செய்வார்கள். மறுபடியும் தொழில் சரியில்லை என்று வேலைக்கு செல்வார்கள்.

வாழ்க்கையில் பார்க்காத தொழில் கிடையாது,செய்யாத வேலை கிடையாது என்று ரீதியாக தொழில் மற்றும் வேலையில் மாறி மாறி இருப்பார்கள்.உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். வயோதிகர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும்.நண்பர்களின் ஆதரவால் தடைப்பட்ட செயல்கள் நிறைவடையும்.

சனியின் சஞ்சார பலன்கள்:

ராசிக்கு 2,3ம் அதிபதியான சனி பகவான் ஜனவரி 17, 2023 முதல் 3ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார்.

புகழ், அந்தஸ்து, கெளரவம் அதிகரிக்கும்.புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் முயற்சிகள் மன நிறைவு தரும். விற்கப்பட வேண்டிய சொத்துக்கள் இருந்தால் விற்றுத் தீரும். உயில் எழுதுவதை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடவும். வேலையாட்களிடம் நிலவி வந்த குழப்பம் மறையும். புதிய வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்கள் அகலும்.

நினைத்த காரியங்கள் அலைச்சலுடன் நிறைவேறும்.

கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் தாமத பலன் உண்டு விவசாயிகள் கிணறு தோண்ட ஏற்ற நேரம். அடிமைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சொந்தத் தொழில் செய்யும் சூழல் உருவாகும்.நிலம் தொடர்பான முதலீட்டில் கவனம் தேவை. தாயின் ஆரோக்கியம் சீராக இருக்கும். தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறையான பத்திரப் பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். சிலருக்கு அடமானத்தில் உள்ள சொத்து மீண்டு வரும்.தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற காலம்.

திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.குழந்தைகளை சிரத்தையோடு கண்காணிக்கவும்.ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விடும்.

ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

ராசிக்கு 5ம் இடத்தில் நிற்கும் ராகுவும் 11ம் இடத்தில் நிற்கும் கேதுவும் அக்டோபர் 30, 2023 அன்று ராகு 4ம் இடத்திலும் கேது 10ம் இடத்திற்கும் இடம் பெயறுகிறார்கள். ராகு, கேதுக்களால் பூர்வீகம் தொடர்பான மன உளைச்சல் அதிகரிக்கும். சிலருக்கு செயற்கை கருத்தரிப்பால் குழந்தை உருவாகும்.தம்பதியர்களுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உணவுப் பொருட்கள், கேட்டரிங், ஹோட்டல்கள் தொழில் நடத்துபவர்களின் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

பலர் புதியதாக பண்ணை மற்றும் விவசாயத் தொழிலில் ஈடுபடுவர்கள். சிலருக்கு அசையும், அசையாச் சொத்து வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் பழுதடைந்த பழைய சொத்துக்கள் அல்லது தரிசு நிலங்களை விற்று விட்டு புதிய வீடு, மனை வாங்கலாம்.சிலர் குடியிருக்கும் வீட்டை வாஸ்துப்படி திருத்தி அமைக்கலாம். தாயின் ஆரோக்கிய குறைபாடு அகலும். தாயின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் நிலவிய கருத்து வேறுபாடு மறையும். தாய் வழிச் சொத்தில் இருந்த வம்பு வழக்குகள் சாதகமாகும். அழகு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். சிலர் தங்கம் வாங்குவார்கள்.

திருமணம்: ஏழரைச் சனியின் ஆதிக்கத்தால் தடைபட்ட திருமணங்கள் இனி நல்ல முறையில் நடைபெறும். ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் பெற்றோர்கள், பெரியவர்களின் நல்லாசியுடன் குருவருளாலும், திருவருளாலும் திருமணம் நடைபெறும். சிலருக்கு நெருங்கிய உறவுகள் அல்லது நண்பர்கள் மூலம் வரன் அமையும்.

பெண்கள்: பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும்.உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு.வாழ்க்கை துணையின் வேலை நிரந்தரமாகும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் உண்டாகும். கணவருடன் நல்ல புரிதல் உண்டாகும்.குழந்தை பாக்கியம் கிட்டும். மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும். நண்பிகளுடன் இணைந்து அழகு ஆடம்பரப் பொருட்கள், உணவுத் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும்.

மாணவர்கள்: மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். படிப்பில் பின் தங்கிய மாணவர்கள் கூட நன்றாக படிப்பார்கள்.அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் அதிக மதிப்பெண் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்.

மூலம்: புகழ், அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கும். புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் முயற்சிகள் மன நிறைவு தரும். தம்பதிகளின் உறவில் அந்யோன்யம் நீடிக்கும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். காணாமல் போனவர்கள் வீடு திரும்புவார்கள். பிள்ளைகளின் நலனுக்காக அதிக செலவு செய்ய நேரும். காதல் விவகாரத்தில் முடியும்.நண்பர்கள், நிதி நிறுவனங்கள் மூலம் பண உதவி கிடைக்கும்.பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும்.வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.

பரிகாரம்: அமாவாசை நாட்களில் பசுவை 27 முறை வலம் வந்து வணங்கி காய்கனிகளை தானம் தர வேண்டும்.

பூராடம்: அனைத்து விதமான நல்ல முயற்சிகளும் பலிதமாகும். பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம்.பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். இழந்த பதவி தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு ஆதாயம் உண்டு. இது வரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்ல நேரும். மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும். பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும்.மனதிற்குப் பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள். தாய், தந்தையின் நல்லாசி கிடைக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

பரிகாரம்: மேலும் வளம் பெற தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்பது நல்லது.

உத்திராடம் 1: திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். குடும்ப உறவுகளிடையே நிலவி வந்த சங்கடங்கள் மறையும். தன வரவு தாராளமாக இருக்கும்.அடமான நகைகள் மீண்டு வரும்.அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.கருத்து வேறுபாட்டால் இழந்த பழைய வேலை மீண்டும் கிடைக்கும். அரசிடமிருந்துவீடு, வீட்டு மனை அல்லது வீடு கட்டத் தேவையான நிதியுதவி கிடைக்கும். சில சமூக ஆர்வலர்களுக்கு அரச கௌரவம் கிடைக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். விவசாய நிலத்திற்கு புதிய ஒப்பந்ததாரர், குத்தகைதாரர்கள் கிடைப்பார்கள்.

பரிகாரம்: வளர்பிறை பஞ்சமி திதியில் சிவசக்தி வழிபாடு செய்து வர பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெற்று சுப பலன்கள் நடைபெறும்.

புத்தாண்டிற்கு தனுசு ராசியினர் சென்று வழிபட வேண்டிய திருத்தலம் தென்குடித்திட்டை. தஞ்சாவூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது தென்குடித்திட்டை. இங்கே உள்ள அற்புதமான ஆலயத்தில் குடிகொண்டிருக்கிறார் ராஜகுரு. ஏழரைச் சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடும் விருச்சிக ராசியினர் இங்கு சென்று வழிபட்டு வர புத்தாண்டு புதிய வாழ்வியல் மாற்றத்தை உருவாக்கும்.

Similar News