தனுசு - இன்றைய ராசி பலன்கள்

ஆங்கில ஆண்டு பலன் - 2022

Published On 2022-05-21 08:19 GMT   |   Update On 2022-05-21 08:20 GMT

அறிவாற்றலும், திறமையும் நிறைந்த தனுசு ராசியினருக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டில் அனைத்து விதமான பாக்கிய பலன்களும் உங்களை தேடி வர உள்ளது. நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் அமையப் போகின்றது. உங்களின் செயலில் வேகத்தை வழங்குவதுடன் மனதில் புத்துணர்ச்சியும் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் சக்தியும் உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் சுமூகமான உறவு உண்டாகும். இதுவரை நிலவிய மந்த நிலை மாறும். எங்கு சென்றாலும் உங்களுக்கு முதலிடம் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகளை இந்த புத்தாண்டில் நிறைவு செய்து மகிழ்வீர்கள்.

ராசி அதிபதி குருவின் சஞ்சாரம், தனாதிபதி சனியின் சஞ்சாரம் மற்றும் ராகு/கேதுவின் சஞ்சாரம் சுப பலன்களைத் தரவுள்ளது. புத்தாண்டிற்கான விரிவான பலன்களைப் பார்க்கலாம்.

குரு சஞ்சார பலன்: ஆண்டின் தொடக்கத்தில் குருபகவான் 3-ம் இடமான சகாய ஸ்தானத்தில் ஏப்ரல் 13, 2022 வரை சஞ்சாரம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் உங்களின் முயற்சியும் விருப்பங்களும் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். உங்களுடைய புத்தி சாதுர்யத்தை பயன் படுத்தி அனைத்தையும் சாதிப்பீர்கள்.

குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறு வதற்கான சாத்திய கூறுகள் தென்படும். ஆண்களுக்கு மனைவி வழிச் சீதனம் வீட்டையும், மனதையும் நிரப்பும். பேஸ்புக் மூலம் புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புதிய நண்பர்களால் சில சங்கடங்கள் நேரலாம் என்பதால் கவனம் தேவை. உங்க ளின் சகோதர, சகோ திரிகளுக்கு வெளி நாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ராசியதிபதி குரு 3--ல் இருப்பதால் உங் களின் சொத்துக்களை உடன் பிறந்தவர்கள் பயன்படுத்துவார்கள் அல்லது பூர்வீக சொத் தில் அவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க லாம். இடமாற்றம், வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் என அவரவர் தேவைக்கும் வயதிற்கும் ஏற்ற மாற் றங்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க் கையால் குடும்பத்தில் மகிழ்சியும் சந்தோ ஷமும் அதிகரிக்கும்.

ஏப்ரல் 13-ல் குரு 4-ல் ஆட்சி பலம் பெற்றபிறகு புதிய தொழில் வாய்ப்புகள், ஒப்பந்தங்கள் கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் நிலவிய தடைகள் தகறும். வாடகை இடத்தில் குடியிருந்தவர்கள் சொந்த கட்டிடத்தில் குடியேறும் அமைப்பு உண்டாகும். வெளிநாட்டு உறவினர்கள் மூலம் அனுகூலமான பதில் வந்து சேரும். தடைபட்ட சுப காரியம் தொடர்பான பேச்சு வார்த்தை கைகூடும். 4-ல் ஆட்சி பலம் பெறும் குருவிற்கு 2-ல் நிற்கும் சனியின் பார்வை கிடைப்பதால் அடமானத்தில் உள்ள சொத்துக்கள், நகைகள் மீண்டு வரும்.

உடலில் இருந்த ஆரோக்கிய குறைபாடு அகலும். தாயின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய் மாமாவிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். வீட்டிற்குத் தேவையான அழகு ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் விருப்ப ஒய்வு பெறும் வாய்ப்பு உள்ளது. ஏழரைச் சனியையும் மீறிய சுபபலன் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வெளிநாட்டிலிருந்து பூர்வீகம் வந்து செல்வதில் நிலவிய பிரச்சனைகள் தீரும்.

சனியின் சஞ்சார பலன்கள்: ஆண்டு முழுவதும் சனி பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஐந்தாண்டுகளாக கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும். குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கல் அகலும். வருமானம் அதிகரிக்கும் . இனிமேல்வராது என்று முடிவு செய்த வராக்கடன் வசூலாகும்.

குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். 2-ம் அதிபதி சனி 2-ல் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பெரும் விரயம் ஏற்படாது என்றாலும் வீண் செலவுகளை குறைத்து உங்கள் வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு அகலக்கால் வைக்காமல் நிதனமாக செயல்பட்டால் கடன் இல்லா பெருவாழ்வு வாழும் பாக்கியத்தை சனி பகவான் தந்து விடுவார்.

26.2.2022 முதல் 6.4.2022 வரை தனுசிற்கு 5,12-ம் அதிபதியான செவ்வாய் ராசிக்கு 2ல் இரண்டாம் அதிபதி சனியுடன் இணைகிறார். 5-ம் அதிபதியும் இரண்டாம் அதிபதியும் சேருவதால் பிள்ளைகளின் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. சிலரின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். ஜனன கால ஜாதக ரீதியான தசா புக்தி சாதகமாக இருந்தால் பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். தசா புக்தி சாதகமற்றவர்களுக்கு பங்குச் சந்தை பெரும் இழப்பைத் தரும்.

செவ்வாய் தனுசிற்கு பூர்வ புண்ணியாதிபதி என்பதால் மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும். தீடீர் லாபம் கிடைக்கும். எதிர்பாராத மருத்துவ செலவில் விரயம் ஏற்படும். நீண்ட தூர பயணம் செய்ய நேரும். சில வயதான பெற்றோர்கள் தங்கள் வாரிசுகள் மரியாதை குறைவாக நடத்துவதாக கருதி முதியோர் இல்லம் சென்று விடுவார்கள்.

ராகு/கேது பெயர்ச்சி: ஏப்ரல் 12, 2022 வரை ராசிக்கு 6-ல் இருக்கும் ராகு மற்றும் 12-ல் உள்ள கேதுவால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு பலருக்கு உண்டாகும். சுய ஜாதகத்தை சரிபார்த்து வெளிநாடு வாய்ப்பை முடிவு செய்வது உத்தமம். கோட்சார ராகு ஒன்பதாமதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் பொருள் கடன் மற்றும் பிறவிக் கடனில் தத்தளித்த உங்களுக்கு கர்மவினைத் தாக்கம் குறையும் காலம் வந்துவிட்டது. வாழ்நாளின் பாதியை தந்தையின் கடன் மற்றும் பூர்வீக சொத்திற்காக இழந்து நொந்த உங்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது. தந்தை- மகன் உறவு சிறக்கும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும்.குழந்தை பாக்கியம் உண்டாகும். செயற்கைக் கருத்தரிப்பிற்கு முயற்சி செய்பவர்களுக்கும் இது சாதகமான காலம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்யம் மனநிறைவு தரும்.

ஏப்ரல் 12-ல் ராகு 5ம் இடத்திற்கும் கேது 11-ம் இடத்திற்கும் மாறும் போது குழந்தைகளின் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆத்மஞானம் கிடைக்கும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு கிடைக்கும் பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். ஜனனகால ஜாதகத்தில் சுபத்தை மிகுதிப்படுத்தும் 5, 9-ஆம் அதிபதிகளின் தசை நடந்து கொண்டிருந்தால் புகழ் கொடிகட்டிப் பறக்கும். நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தால் மதிப்பு, மரியாதை உயரும்.

5ல் ராகு இருப்பதால் பூர்வீகச் சொத்து இன்று வந்துவிடும், நாளை வந்துவிடுமென, இலவுகாத்த கிளியாக நாளைக் கடத்தவேண்டும். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்கு உருவாகும். தந்தையின் ஆரோக்கியக் கேட்டினால் பொருள்விரயம் மிகும். எனினும் ஆயுள்குற்றம் இல்லை. தந்தை- மகன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். தந்தை- மகன் பிரிந்துவாழ நேரும். தந்தைவழி உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார்கள். அரசுவழி ஆதாயம் கிடைப்பதில் தடை ஏற்படும். குலத்தொழில் செய்துவந்தவர்கள் அதைவிட்டு வேறுதொழில் செய்யும் எண்ணம் உருவாகும்.

திருமணம்: கோட்சார ராகு/கேது மற்றும் குருவால் திருமணம் தனுசு ராசிக்கு திருமணம் தடைபடவில்லை. 40 வயதைக் கடந்தும் திருமணத் தடை இருப்பவர்களுக்கு கூட ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் நடந்து விடும் என்பது ஜோதிட ரீதியான உண்மை. சுக்கிர தசை, சூரிய தசை நடப்பவர்களுக்கு சுய ஜாதகப்படி தோஷம் இருந்தாலும் 2022-க்குள் திருமணம் நடந்து விடும். சந்திர தசை நடக்கும் தனுசு ராசியினருக்கு அஷ்டமாதிபதி தோஷத்தால் திருமணத் தடை நீடிக்கும். கோட்சார குரு ஏப்ரல் 2022-ல் மீன ராசிக்கு பெயர்ந்தவுடன் 5-ம் பார்வையால் ராசிக்கு எட்டாம் இடமான கடகத்தைப் பார்ப்பதால் பலருக்கு திருமணத் தடை நீங்கும்.

பெண்கள்: ஏழரைச் சனியின் தாக்கம் இருப்பதால் இந்த ஆண்டு முழுவதும் பொறுமையையும் நிதானத்தையும் கடை பிடிப்பது முக்கியம். பொருளாதார பற்றாக்குறை அகலும்.வீண் செலவுகளை குறைத்து சிக்னத்தை கடைபிடிக்க வேண்டும். கணவர் மற்றும் குழந்தைகள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள்: நான்காம் அதிபதி குரு 4-ல் ஆட்சி பலம் பெறும் போது ஏப்ரல் 2022--க்கு மேல் நல்ல மாற்றம் உண்டாகும். அன்றாடம் அழியக்கூடிய காய்கறிகள், பழங்கள், நெல் போன்ற உணவுப் பொருட்களை பயிரிடுபவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு.

உத்தியோகஸ்தர்கள்: தடைபட்ட நிலுவையில் உள்ள சம்பளபாக்கி மொத்தமாக வந்து சேரும். பல வருடங்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்களிடம் ஒப்படைத்த புதிய பொறுப்புகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். அலுவலகமே வியக்கும் வகையில் உங்களின் திறமைகள் வெளிப்படும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும்.

முதலீட்டாளர்கள் / வியாபாரிகள்: சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அபாரமான வளர்ச்சி இருக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். தொழிலுக்கு தேவையான பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கடனில் தத்தளித்துக் கொண்டு இருந்த தொழில் நிறுவனங்கள் கடனில் இருந்து மீளும்.

அரசியல்வாதிகள்: அரசு உத்தியோகம் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேசவேண்டும். 2-ம் அதிபதி சனி 2-ல் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் எதிர்கட்சியினர் உங்கள் வார்த்தையைக்கொண்டே உங்கள் கட்சியில் கலகத்தை ஏற்படுத்துவார்கள்.

மாணவர்கள்: மாணவ - மாணவிகளின் கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கல்வியில் சாதனை படைக்கக்கூடிய நல்ல காலம். உயர் கல்விக்கான வாய்ப்பு மிகச் சுலபமாக கிடைக்கும். வெளியூரில் அல்லது வெளிநாட்டில் விடுதியில் சென்று தங்கி படிக்கும் வாய்ப்பு உருவாகும்.

மூலம்: குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை பெருகும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் நலனில் அதிக அக்கறை காட்டினாலும் இளைய சகோதரர் உங்களுக்கு எதி ராகவே செயல்படுவார். உடல் உபாதைகள் அகலும். சனிக் கிழமை சிவ வழிபாடு செய்வது சிறப்பு.

பூராடம்: தொழில் வளம் பெருகி செல்வச் செழிப்பு ஏற்படும். மிகுதியான சுபவிரயம் உண்டாகும். எளிதாக பணம் கிடைக்கிறது என்பதற்காக குறுக்கு வழியை தேடக்கூடாது.வெள்ளிக்கிழமை காலை 6---7 சுக்ர ஓரையில் மகாலட்சுமியை வழிபட கடன் சுமை தீரும்.

உத்திராடம் 1-ம் பாதம்: உங்களின் திட்டவட்டமான, தீர்க்கமான வழி நடத்தல் குடும்பத்தில் நன்மதிப்பை பெற்றுத் தரும். குடும்பத்தாரின் தேவையை குறிப்பறிந்து நிறைவேற்று வீர்கள். ஞாயிற்று கிழமை சிவன் கோவிலில் உலவாரப் பணிகள் செய்திட காரியசித்தி கிட்டும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News