துலாம் - வார பலன்கள்

வார ராசிப்பலன் 19.10.2025 முதல் 25.10.2025 வரை

Published On 2025-10-19 11:30 IST   |   Update On 2025-10-19 11:31:00 IST

புதிய மாற்றம் ஏற்படப் போகும் வாரம். ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கை இருப்பதால் புகழின் உச்சிக்கு செல்லப் போகிறீர்கள். வீண் அலைச்சல், துக்கம் விலகும்.தடைகள் தகறும். நிறைய நன்மைகள் நடைபெறும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிம்மதி நிறைந்து இருக்கும். வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, ஊடகங்கள், குலத் தொழில் போன்றவற்றில் இருப்பவர்களுக்கு சுப பலன்கள் இரட்டிப்பாகும். நீண்டநாள் பிரச்சனைகள் முடிவிற்கு வரும். சிலர் பூர்வீகச் சொத்தை விற்று புதிய வீடு வாங்குவார்கள்.

தீபாவளி ஆபரில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையில் மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினைகள் சுமூகமாகும். திருமணத் தடை அகலும். புதிய எதிர்பாலின நட்பை தவிர்ப்பது நல்லது. கோபத்தை கட்டுப்படுத்தி நிதானமாக செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். அமாவாசை அன்று தயிர் சாதம் தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

Similar News