சிம்மம் - தமிழ் மாத ஜோதிடம்

2026 பங்குனி மாத ராசிபலன்

Published On 2026-03-14 16:41 IST   |   Update On 2026-03-14 16:42:00 IST

ஆளுமை தன்மை நிறைந்த சிம்ம ராசியினரே

பங்குனி மாதத்தில் உங்களின் ராசி அதிபதி சூரியன் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சனி, செவ்வாய் மற்றும் புதனுடன் சஞ்சரிப்பார்.தைரியத்துடன் வீரமும் அழியாப் புகழும் பெருமையையும் அதிகமாகும்.தெய்வ பலம் மனித பலத்தை விட உயர்ந்தது என்பதை உணர்வீர்கள்.ஒரு சிலர் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும்.பல வருடங்களாக நீங்கள் செய்த பிரார்த்தனை, வழிபாடுகள் பலன் தரும். பள்ளிக்கு சென்று கற்றதை விட வெளி வட்டாரத்தில் அனுபவத்தில் கற்ற பாடம் உங்களுடன் பயணம் செய்யும். காலம் உங்களுக்கு பல வித அனுபவங்களை பாடமாக நடத்தும்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும்.

அந்நிய மொழி, பாஷை பேசுபவர்களின் நட்பு கிடைக்கும், அந்நிய மொழி பேசுபவர்களிடையே வாழும் நிலை ஏற்படும். சிலருக்கு மத நம்பிக்கை குறையும். சிலர் அதீத மத நம்பிக்கையால் சட்ட சிக்கலை சந்திக்க நேரும்.பிள்ளைகளின் படிப்பு, வேலை, சம்பாத்தியம், திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பலன்கள் சந்தோஷம் தரும்.நியாயவாதியான நீங்கள் தவறு செய்தவர்களின் குறையை சுட்டி காட்டி அதனால் பிரச்சனைகள் உருவாகும். தாய், தந்தையிடம் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதனால் மன வேதனை அதிகமாகும். சில வயதான பெற்றோர்களுக்கு தாங்கள் முதியோர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டு விடுவோமோ என்ற பய உணர்வு இருக்கும்.

எந்த செயலிலும் நாட்டம் இல்லாமல் மனதில் வெறுமை வாழ்வில் பிடிப்பு இல்லாத நிலை, மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். பிதுர் வழி சொத்துக்கள் தொடர்பான மனக்குழப்பம் சஞ்சலம் இருக்கும். ஒரு சிலருக்கு ஆசிரியர், பெற்றோர்களின் நல்லாசியுடன் வெளிநாட்டிற்கு சென்று உயர் கல்வி கற்கும் வாய்ப்பு உருவாகும். உயர் கல்விக்கு முயற்சி செய்யும் மாணவ, மாணவிகளுக்கு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.பேச்சில் நிதானமும் பொறு மையும் அவசியம்.

முன் கோபத்தில் பகைமை உருவாகும் என்பதால் பணியில் கவனத்துடன் செயல்பட வேண்டும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். காரியத்தடையால் மன சஞ்சலம் அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கி யம் குறையும். மருத்துவ செலவு அதிகரிக்கும்.ஜனன கால ஜாதகத்தில் பாதகமான தசை , புத்தி நடந்தால் சுகவீனத்தால் மருத்துவமனையில் தங்கி வைத்தியம் செய்ய நேரலாம்.சிலர் ஆன்மீகத்தை பயன்படுத்தி பொருள் சம்பாதிக்க முயலலாம்.

குருமங்கள யோகம்

சிம்ம ராசிக்கு 5,8-ம் அதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரை 4,9ம் அதிபதி ஆன செவ்வாய் நான்காம் பார்வையால் பார்க்கிறார்.தொழில் சிறப்பாக நடைபெறும். தொழில் ரீதியான வருமானம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பெரிய லாபம் எதுவும் தங்காது. கூட்டம் கூடும் கல்லா கலை கட்டாது. அதிக பணப் புழக்கம் இருக்கும். கையில் பணம் தங்காது.தொழில் போட்டிகளை சமாளிக்க அதிக சிரமங்களை சந்திக்க நேரும். உங்கள் இன, மத இயக்கங்களின் முதன்மை பதவியும், கௌரவமும் தேடி வரும். மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்து கொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகு முறை எல்லோரிடமும் நன்மதிப்பை பெற்றுத் தரும். குழந்தைகளுக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளை செய்து மகிழ்வீர்கள். அவ்வப்போது குழந்தைகளைப் பற்றிய மன சஞ்சலமும் மனதை வாட்டத் தான் செய்யும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கி தவித்தவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். சிம்ம ராசியினர் புதிய காதல் வலையில் மாட்டாமல் மனதை கட்டுப்பாடுடன் வைக்க வேண்டும். பங்குச் சந்தையால் பெரும் ஆதாயம் உண்டு. வெளிநாட்டில், வெளி மாநிலத்தில் வாழ்ந்தவர்கள் பூர்வீகம் வந்து செல்வார்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான வம்பு வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமாகும். வரா கடன் என்று முடிவு செய்த பணத்தின் சிறு பகுதி உங்களைத் தேடி வரும். பாலிசி முதிர்வு தொகை, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, என எதிர்பாராத பணம் உங்களை மகிழ்விக்கும்.

பொருளாதாரம்

மனக் குழப்பம் விலகி தெளிவான மன நிலையுடன் சிந்தித்து செயல்படுவீர்கள். மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டமாகும். பணப்புழக்கம்அதிகரிக்கும். நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும். பெண்கள் புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வார்கள்.லாட்டரி, ரேஸ், பங்குச் சந்தையில் எதிர்பாராத திடீர் மாற்றம் உங்களை நிலை தடுமாற வைக்கும். சிலர் கடன் பெற்று வசதி, வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வார்கள்.குடும்ப முன்னேற்றத்திற்கு சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள். அழகு ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

முதலீட்டாளர்கள்

திருப்புமுனையான வருடம்.தொழில் முயற்சிகள் பலிதமாகும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.தொழிலில் சீரான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.அஷ்டமச் சனி உள்ளதால் எதையும் பல முறை சிந்தித்து செயல்படுத்த வேண்டும்.

அஷ்டமச் சனியின் தாக்கத்தால் தொழிலில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் லாப இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்படாது.புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனையை கொடுத்து பின் வெற்றியை தரும். தொழிலுக்கு அரசு அதிகாரிகளின் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். பெரிய தொகையை கடனாக பெற்று அதன் மூலம் தொழிலை விரிவு படுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்

உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிடைக்கும். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்திற்காக வேலையை விட்டு தாயகம் திரும்புவார்கள். வேலை மாற்றம் செய்வதை தவிர்ப்பது நல்லது.சமுதாய அங்கீகாரத்தை அதிகரிக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். மேல் அதிகாரிகளின் அன்பும், ஆதரவும், பாராட்டும் கிடைக்கும்.அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் 'தனி வருமானம் ' மகிழ்சியை தரும். தொழிலாளர்களுக்கு குறைந்த வேலைக்கு நிறைந்த வருமானம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். செலவுகளை கட்டுக்குள் வைத்து சேமிப்பை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும். நேர்மைவாதியான நீங்கள் எல்லோரும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகளுக்கு நன்மைகள் மிகும்.அடிமட்டத் தொண்டர்களின் உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. அடிக்கடி கட்சி மாற்றம் செய்வதையும் வம்பு, வழக்கைத் தவிர்த்தல் நல்லது. உலகத்திற்கும்,கட்சி மேலிடத்திற்கும் தெரியாத உங்கள் மக்கள் சேவை தெரியத் தொடங்கும்.உங்களின் பெயரில் இருந்த புகார் மனுக்கள் ,ஊழல், தேர்தல் வழக்குகள் அனைத்திலும் சாதகமாக தீர்ப்பு வரும். அரசியலில் புகழையும் செல்வாக்கையும் பெற்று தனித் தன்மையுடன் திகழ்வீர்கள். எத்தகைய இன்னல்கள் வந்தாலும் அதை எதிர்த்து நின்று சமாளிப்பீர்கள். லாப ஸ்தான குரு பகவானால் உங்களுக்கு மதிப்பு மரியாதை உயரும் திடீர் லாபம் கிட்டும்.

பெண்கள்

புண்ணிய பலன்கள் நடக்கும்.மன வலிமை அதிகரிக்கும்.தடைபட்ட சுப காரியங்களும் முக்கிய பணிகளும் சுலபமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். சில வீட்டு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவார்கள். பெண்கள் வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பார்கள். தாயின் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும்.சிலருக்கு பிள்ளைகள் மூலம் வீடு, வாசல் யோகம் உண்டாகும்.சிலருக்கு சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.சட்ட ரீதியான நெருக்கடிகள் நீங்கும். மாதவிடாய் கோளாறு சீராகும்.திருமணத்திற்கு இந்த மாதம் நாள் குறிக்கலாம். பெண்கள் புதிய தங்க நகைகள் வாங்கி அணிவார்கள்.

கவனம் தேவை

செவ்வாய் சனி சேர்க்கை ராசிக்கு 8ம்மிடமான அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சனியுடன்4,9ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார். உஷ்ணம் தொடர்பான நோய்கள் வாட்டி எடுக்கும். ஆண்களுக்கு சிறுநீரக பிரச்சனையும் பெண்களுக்கு கருப்பை பிரச்சனையும் உருவாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு நிலவும். பெண் களுக்கு நோய் தாக்கம் அதிகம் இருக்கும். மிகக் குறிப்பாக கருப்பை தொடர்பான நோய் ஏற்படும். தவறான உணவு பழக்கம் காரணமாக இளம் பெண்களுக்கு கருக்குழாய் அடைப்பு அல்லது கருத்தரிக்கும் தன்மை குறையும். பெண்களுக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். காசோலை , பண மோசடி வழக்கு , விவாகரத்து வழக்கு என வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்படும். தங்க நகைகள் என்று போலி நகைகள் வாங்கி ஏமாறுவீர்கள். அழகு , ஆடம்பர பொருட்களை நம்பி ஏமாற்றம் அடைவீர்கள். விரயங்கள் அதிகரிக்கும். சிலர் மனத் தாங்கல் அதிகரிப்பால் தலை மறைவு வாழ்க்கை வாழலாம். இனம் புரியாத வெறுமையும் தூக்கமின்மையும் ஏற்படலாம். சிலர் வேலைக்காக வெளிநாடு செல்லும் நிலை ஏற்படும்.

பரிகாரம்

தினமும் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்திய ஹ்ருதயம் படிக்க வேண்டும் அல்லது ஒலிக்க செய்து கேட்க வேண்டும். சனிக்கிழமை அரச மரத்தடியில் தீபம் ஏற்றி வழிபடவும்.

'பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News