வார ராசிபலன் 30.11.2025 முதல் 6.12.2025 வரை
30.11.2025 முதல் 6.12.2025 வரை
கடகம்
நன்மைகள் நடக்கும் வாரம். ராசியில் குரு பகவானும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரனும் பாக்கியஸ்தானத்தில் சனிபகவானும் சஞ்சரிப்பதால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. இது கடக ராசிக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு நின்றாலும் ராகுக்கு வீடு கொடுத்த சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.
மனதில் நிலவிய கவலைகள் கஷ்டங்கள் விலகும். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும். அனைத்து செயல்களிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். புதிய வீடு கட்டுதல் கட்டிய வீட்டை விரிவு செய்தல் போன்றது தொடர்பான சிந்தனைகள் இருக்கும்.
கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி பந்தயங்களில் அமோகமாக வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வ அருளுடன் சகல பாக்கியங்களும் கைகூடும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து புனித நீரால் அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406