null
வார ராசிபலன் 28.9.2025 முதல் 4.10.2025 வரை
28.9.2025 முதல் 4.10.2025 வரை
அனுகூலமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்ப்பதால் பிறருக்கு வழிகாட்டியாக வாழ்வீர்கள். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்பாக செயல்படும் தன்மை கூடும். புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அதை பயன்படுத்திக் கூடிய சந்தர்ப்பங்களும் உருவாகும். தடைபட்ட பத்திரப்பதிவு இந்த வாரம் நடந்து முடியும்.
புத ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் உற்சாகத்தை அதிகரிக்கும். சிலருக்கு அரசின் இலவச தொகுப்பு வீடு கிடைக்கும். தம்பதிகளிடம் புரிதல் அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் எதிர்பாராத அதிர்ஷ்ட பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
ஆரோக்யத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகலாம். சிலர் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கலாம். 29.9.2025 அன்று 3.55 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பேச்சு வார்த்தைகளை ஒத்தி வைக்கவும். பணம் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. சனிக்கிழமை விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவதால் கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406