வார ராசிபலன் 7.9.2025 முதல் 13.9.2025 வரை
7.9.2025 முதல் 13.9.2025 வரை
மனக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டிய வாரம். ராசியில் ஆறாம் அதிபதி சந்திரன் ராகுவுடன் இணைந்துள்ளார். இது சந்திர கிரகண தோஷ அமைப்பாகும். இதற்கு தன லாபாதிபதி குருவின் பார்வை இருப்பது ஓரளவு சாதகமான பலனை தரும். எனினும் மனசுக்குள் பய உணர்வு மிகுதியாக இருக்கும். பிறவிக் கடன் மற்றும் பொருள் கடனால் மன உளைச்சல் அதிகமாகும்.
பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை முடிந்து விட்டால் பாதிப்புகள் சற்று குறைந்து விடும். நீண்டகாலமாக உங்களைப் பாதித்த நோய்த் தொந்தரவில் இருந்து விடுபடுவீர்கள். காரணமற்ற இடப்பெயர்ச்சியால் தொழில், உத்தியோகத்தில் அலைச்சல், அலுப்புகள் அதிகமாகும்.
பிரிந்து போன உறவுகளை இணைக்க பெரும் முயற்சி எடுப்பீர்கள். ஆடம்பரச் செலவால் பணவிரயம் ஏற்படும். குடும்பப் பெரியவர்களை, இறந்தவர்களை நிந்தித்து பேசக்கூடாது. தீர்த்த யாத்திரை, ஆன்மீக யாத்திரை, முன்னோர்கள் வழிபாட்டின் மூலம் இன்னல்களில் இருந்து விடுபட முடியும். தாய், தாய் வழி உறவுகளை அனுசரித்து செல்ல வேண்டிய வாரம்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406