வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை
14.9.2025 முதல் 20.9.2025 வரை
புதிய எழுச்சியுடன் வலம் வரும் வாரம். ராசிக்கு சுக்ரன் பார்வை உள்ளது. நிம்மதி இரட்டிப்பாகும். சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் தீரும். வில்லங்க சொத்திற்கு உரிய பட்டா மற்றும் முறையான ஆவணங்கள் கிடைக்கும்.தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இறைசக்தியை உணர்வார்கள். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பயணங்கள் உண்டு.
வீட்டை விரிவு செய்தல், புதிய வீடு கட்டுதல், நவீன பொருட்களை சேர்த்தல் போன்ற எண்ணங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும். பிள்ளைகள் தீய பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தம்பதிகளிடையே நல்ல ஒற்றுமை நிலவும். போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவத்தால் குணமடைவார்கள்.
அரசு உயர் அதிகாரிகளின் தனித் திறமைமிளிரும். பங்குச் சந்தை முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். மகாளய பட்ச காலத்தில் துப்புரவு தொழிலாளிகளின் தேவையறிந்து உதவுவதால் முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406