ஆன்மிக களஞ்சியம்

வேப்பங்கொண்டபாளையம் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில்

Published On 2023-10-05 11:28 GMT   |   Update On 2023-10-05 11:28 GMT
  • இந்த தலத்தில் நான்கு திருக்கரங்களோடு அழகுற தரிசனம் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.
  • திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலும்,

வேலூர் மாவட்டம் சோளிங்கரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது வேப்பங்கொண்டபாளையம்.

ஒருகாலத்தில் வேணுகோபாலபுரம் என அழைக்கப்பட்ட இந்த ஊரின் சாலையோரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீகிருஷ்ணன் கோவில்.

இந்த தலத்தில் நான்கு திருக்கரங்களோடு அழகுற தரிசனம் தருகிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

இதனால் இவரை ஸ்ரீசதுர்புஜ கிருஷ்ணர் என்று போற்றுகின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தன்று இங்கு வந்து,

திருமஞ்சனம் செய்து பிரார்த்தனை செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கப்பெறுவர் என்கின்றனர் இந்த ஊர்க்காரர்கள்.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நாளில் திருவீதி உலா, சிறப்பு பூஜைகள், உறியடி உத்சவம் என இந்த தலம் அமர்க்களப்படும்.

Tags:    

Similar News