ஆன்மிக களஞ்சியம்

தோஷங்களைப் போக்கும் அதர்வண யந்திரம்

Published On 2024-02-15 18:13 IST   |   Update On 2024-02-15 18:13:00 IST
  • அரசு தொடர்புடைய காரியங்களில் ஏற்படும் தடைகள் தீர, ஆட்சிஸ்வரரை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும்.
  • இங்கு வழிபாடு செய்பவர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கக்கூடிய பேறு பெறுவார்கள்.

அச்சரபாக்கம் தலத்தில் சர்வேஸ்வரன் அட்சரம் என்ற எழுத்தின் வடிவமாக இருப்பதால் இங்கு வழிபாடு செய்யும் அன்பர்கள் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கக்கூடிய பேறு பெறுவார்கள்.

அரசு தொடர்புடைய காரியங்களில் ஏற்படும் தடைகள் தீர, ஆட்சிஸ்வரரை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாகும்.

மேலும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்வதால் அரசுப் பணிபுரிய வாய்ப்பும் ஆளுமைத் திறனும், பதவி உயர்வும் கிடைக்கும்.

ஏழ்மையினாலோ அல்லது வீண் பழியினாலோ உற்றார் உறவினர்களாலும், நண்பர்களாலும் சிறுமைப்படுத்தப்படும் துர்பாக்கியம் ஏற்பட்டால், அதற்கு உடனடியாகப் பரிகாரமளிக்கும் திருத்தலம்.

கடன் தொல்லைகள் அல்லது தவறான நண்பர்களுடன் நெருங்கிப் பழகியதால் அவப்பெயர் ஏற்பட்டு மனதில் எப்பொழுது பார்த்தாலும், பிறரால் என்ன ஏற்படுமோ என்ற நிலை ஏற்படும் போது, வியக்கத்தக்க வகையில் அந்த அச்சத்தை போக்கும்.

இத்தகைய அரிய சக்திக்குக் காரணம், கருவறையில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு அடியில் சில ரகசிய அதர்வண வேத யந்திரங்கள், பிரத்யேகமாக இத்தகைய தோஷங்களைப் போக்குவதற்கென்றே பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதே ஆகும்.

Tags:    

Similar News