ஆன்மிக களஞ்சியம்
சொல்லியது சொல்லியபடி நடக்கும் அதிசயம்
- இவர் தம் குறி சொல்லும் ஆற்றலால், அன்பர்கள் பெருந்திரளாகக் கூடி வந்தனர்.
- கோவிலின் வளர்ச்சியும் புகழும் நாளடைவில் பெருகின.
தம் குருநாதரின் மறைவுக்குப் பின்னர் பாக்கியலிங்கத் தம்பிரான், கோவில் பணிகளை மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து அரும்பாடுபட்டுக் கவனித்து வந்தார்.
இப்போதுள்ள வடபழனித் திருக்கோவிலின் கருப்பக்கிரகமும், முதல் உட்பிரகாரத்திருச்சுற்றும், கருங்கல் திருப்பணியாகச் செய்வித்தவர் ஸ்ரீ பாக்கியலிங்கத் தம்பிரான் ஆவர்.
வடபழனிக் கோவிலுக்கு இவர் பாவாடம் தரித்துக் கொண்ட நாள் முதல், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகள் பணிபுரிந்திருக்கின்றார்.
இவருடைய காலத்தில்தான், இவர்தம் சிறந்த அருட்பெரும் முயற்சிகளின் பயனாகவே, ஸ்ரீ வடபழனி ஆண்டவர் கோவில் மிகவும் பெரும் புகழ் பெறுவதாயிற்று.
சொல்லியது சொல்லியபடியே தவறாது பலித்து வந்தது.
இவர் தம் குறி சொல்லும் ஆற்றலால், அன்பர்கள் பெருந்திரளாகக் கூடி வந்தனர்.
கோவிலின் வளர்ச்சியும் புகழும் நாளடைவில் பெருகின.