ஆன்மிக களஞ்சியம்

மூலவர் முன்பு கிணறு

Published On 2024-02-15 12:45 GMT   |   Update On 2024-02-15 12:45 GMT
  • தண்ணீருக்குள் தான் அந்த விநாயகர் இருக்கிறார்.
  • மூலவர் ஆட்சீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தி.

ஆந்திராவில் புகழ்பெற்ற காணிப்பாக்கம் விநாயகர் கோவில் கருவறை ஒரு கிணற்றின் மீது அமைந்துள்ளது.

தண்ணீருக்குள் தான் அந்த விநாயகர் இருக்கிறார்.

கும்பகோணத்தை அடுத்த திருபுவனத்தில் உள்ள விராலிமலை சித்தர் ஆலயத்திலும் கருவறை முன்பு பெரிய கிணறு உள்ளது.

நோய் தீர்க்கும் தீர்த்தம் கொண்ட கிணறாக அது உள்ளது.

அச்சரப்பாக்கம் ஆட்சிபுரீஸ்வரர் ஆலயத்திலும் கருவறை முன்பு கிணறு உள்ளது.

மூலவர் ஆட்சீஸ்வரர், சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தி.

தாழ அமைந்த சதுரமான ஆவுடையார் பெருமானுக்கு முன்பு நாம் நின்று வழிபடும் இடத்தில் கீழே கிணறு உள்ளதாம்.

கருங்கற்கள் போட்டு மூடப்பட்டுள்ளது.

மழைக்காலத்தில் கற்களின் இடுக்கு வழியாக பார்த்தால் நீர் இருப்பது நன்கு தெரியுமாம்.

சிறப்பு பூஜை நாட்களில் பக்தர்களை அதன் மீதுதான் அமர வைக்கிறார்கள்.

Tags:    

Similar News