ஆன்மிக களஞ்சியம்

மூகாம்பிகை வழிபாடு

Published On 2023-12-02 18:42 IST   |   Update On 2023-12-02 18:42:00 IST
  • பார்வதியின் கணவரான பரமேஸ்வரரால் பூஜை செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!
  • தேவி, அம்பிகையே! இடைவிடாமல் நீ கிருஷ்ணனால் துதி செய்யப்பட்டவளே!

நான்கு கைகளைப் பெற்றவளே! நான் முகனால் துதி செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!

தேவி, அம்பிகையே! இடைவிடாமல் நீ கிருஷ்ணனால் துதி செய்யப்பட்டவளே!

பார்வதியின் கணவரான பரமேஸ்வரரால் பூஜை செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!

தேவர்களும், அரக்கர்களும் தங்கள் மணி முடியில் உள்ள ரத்னங்கள் கீழே புரளும் வண்ணம்

தொட்டு வணங்கத்தக்க திருப் பாத கமலங்களை உடையவளே! அம்பிகையே!

இந்திராணியின் கணவனான இந்திரனால் உள்ளன்புடன் பூஜை செய்யப்பட்டவளே! பரமேஸ்வரி!

தேவி, கொடிய புஜ பல பராக்ரமம் மிகுந்த அசுரர்களுடைய கர்வத்தினை நாசம் செய்தவளே!

தேவி, எவ்வித உறவுகளும் அற்ற பக்தர்களுக்கு பரமானந்த மூலமான மோட்ச சாம்ராஜ்யத்தை அளிக்கக் கூடிய வல்லமை வாய்ந்தவளே! அம்பிகையே!

மனத்திற்கு இனிமையைத் தரக் கூடியவளாகவும்

மனத்தின் போக்கினை அறிந்து நடப்பவளாகவும்

கடக்க முடியாத சம்சார சாகரத்தினைக் கடப்பதற்கு உதவி புரிபவளாகவும்

நல்ல குலத்தில் உதித்தவளாயும் உள்ள மனைவியை அளிக்க வேண்டும்.

மூகாம்பிகையை வழிபடும் போது இதை படித்த பிறகே மகா ஸ்தோத்திரமான தேவி மகாத்மியத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.

இதைப் படிப்பதன் மூலம் மிகச்சிறந்த பலன்கள் உண்டாகும்.

Tags:    

Similar News