ஆன்மிக களஞ்சியம்

கிருஷ்ண ஜெயந்தி-கிருஷ்ணரை வழிபடும் முறை

Published On 2023-09-01 12:33 GMT   |   Update On 2023-09-01 12:33 GMT
  • இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
  • அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.

கிருஷ்ண ஜெயந்தி-கிருஷ்ணரை வழிபடும் முறை

சரி கிருஷ்ண பரமாத்மாவை மிக எளிமையாக வழிபடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்

கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் விரதம் இருக்க வேண்டும்.

பகலில் விரதம் இருக்க வேண்டும்.

இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.

மறுநாள் மீண்டும் கிருஷ்ணரை பூஜித்து வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

கிருஷ்ணருக்கு பூக்களை அர்ப்பணிக்கும்போது மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.

அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும்.

ஸ்ரீ கிருஷ்ணரை மூன்று முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மிகவும் மகிமை வாய்ந்தது.

அதன் ஆற்றல் அளவிட முடியாதது.

எனவே சுதர்சன சக்கரத்தையும் மறக்காமல் வழிபட வேண்டும்.

Tags:    

Similar News