ஆன்மிக களஞ்சியம்

கார்த்திகை தீபத்தின் சிறப்பு!

Published On 2023-11-24 12:45 GMT   |   Update On 2023-11-24 12:45 GMT
  • ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார்.
  • எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும்.

ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார்.

திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும், தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது.

இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது

இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது.

பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது.

கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது.

நிதி வேண்டாம், கருணை நிதி வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல

கருணை நிதி கொடுக்கக் கூடியது கார்த்திகை தீபம்.

எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே

எல்லா வகையிலும் சிறப்பு உண்டாகும்.

எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள்

ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும்.

தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும்.

அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும்.

அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

Tags:    

Similar News