ஆன்மிக களஞ்சியம்

சென்னையில் பிரமாண்ட கிருஷ்ணர் கோவில்

Published On 2023-10-05 11:36 GMT   |   Update On 2023-10-05 11:36 GMT
  • 1 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் கடந்த 2012ம் ஆண்டு திறக்கப்பட்டது.
  • இந்த ஆலயம் முழுவதும் கற்சிற்பங்களால் நிறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்கான்

சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் மிகப்பெரியது ஈ.சி.ஆர். சாலையில் அக்கரையில் அமைந்துள்ள இஸ்கான் ஆலயமாகும்.

1 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ந்தேதி திறக்கப்பட்டது.

காலை 7.15 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த ஆலயம் திறந்து இருக்கும்.

மகாபலிபுரம்

மகாபலிபுரத்தில் உள்ள கோவில்களில் மிகப்பெரிய கோவில் கிருஷ்ணர் கோவிலாகும்.

இந்த தலத்தில் உள்ள கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தன் விரலில் தாங்கிப் பிடித்து இருப்பதாக ஐதீகம்.

இந்த ஆலயம் முழுவதும் கற்சிற்பங்களால் நிறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மகாபலிபுரத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாமல் இந்த கிருஷ்ணர் ஆலயத்துக்கு சென்று வந்தால்,

பொழுதுபோக்கோடு, புண்ணியத்தையும் பெற முடியும்.

Tags:    

Similar News