ஆன்மிக களஞ்சியம்

பக்தியை விட ஒழுக்கமே சிறந்தது-ஒழுக்கத்திருநாள்

Published On 2023-10-20 11:13 GMT   |   Update On 2023-10-20 11:13 GMT
  • பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை.
  • வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

சிவபக்தனாக ராவணன், தினமும் கோவிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம்.

பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை.

சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான்.

இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது.

பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள்.

விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார்.

அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார்.

அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள்.

ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

Tags:    

Similar News