ஆன்மிக களஞ்சியம்

தீமிதி விழா

Published On 2023-08-09 10:10 GMT   |   Update On 2023-08-09 10:10 GMT
  • ஸ்ரீரேணுகாம்பாள் அம்மனின் புடவையை கட்டிக் கொண்டால் விரைவில் எண்ணம் கைகூடும்.
  • அக்னிதேவனுக்கு என்றே தனிச் சன்னதி அமைந்திருப்பது வியப்பானது.

சென்னை குரோம்பேட்டை ஜமீன் ராயப்பேட்டையில் படவேட்டம்மன் ஆலயம் உள்ளது. இங்கு கருவறையில் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீரேணுகாம்பாள் அருள்பாலித்து வருகிறாள்.

வலது கையில் அன்னம், உடுக்கையை பின்னிரு கைகள் தாங்கி நிற்க, முன்னிருகைகள் அபய ஹஸ்தமாகக் காட்சிதர, வருகின்ற பக்தர்களுக்கு கருணைக் கண்களோடு அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.

அம்மன் பீடத்துக்கு கீழே இரண்டு முக வடிவ விக்ரகம் காணப்படுகிறது. அதில் ஒன்று சுமார் ஆயிரம் வருடங்களாக முந்தையது என்கிறார்கள்.

வேறு எந்தத் தலத்திலும் காண முடியாத வகையில் இத்தலத்தில் தென் கிழக்கில் அக்னிதேவனுக்கு என்றே தனிச் சன்னதி அமைந்திருப்பது வியப்பான செய்தியாகும். இக்கோவிலில் நடைபெறும் தீமிதி விழாவில் அக்னியை மூட்டி இந்த அக்னிதேவன் சன்னதியில் வைத்து ஆராதித்து வருகின்றனர்.

இக்கோவிலில் மிகச் சிறப்பான விழாவாக, ஆடி மாதம் நாலாவது வார ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் தீமிதி விழா மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. ஆயிரக் கணக்கான பக்தர்கள் தீமிதியில் பக்தியுடன் கலந்து கொள்கின்றனர்.

கல்யாணம் ஆகாத பெண்கள் மற்றும் குழந்தைப் ேபறு வேண்டி நிற்பவர்கள் இத்தலத்து ஸ்ரீரேணுகாம்பாள் அம்மனின் புடவையை வாங்கி கட்டிக் கொண்டால் வெகு விரைவிலேயே எண்ணம் கைகூடுகிறது.

Tags:    

Similar News