ஆன்மிக களஞ்சியம்

4 வகை மகாமக நீராடல்

Published On 2023-10-07 13:00 GMT   |   Update On 2023-10-07 13:00 GMT
  • இத்தீர்த்தவாரியில் பங்கேற்பது மகாமக ஸ்நானமாகும்.
  • இத்தகைய கிரக அமைப்புகள் நாளில் ரிஷப லக்னத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

மகாமக ஸ்நானம் செய்வதில் நான்கு நிலைகள் உண்டு.

முதலாம் வகை:

மகாமக தீர்த்தவாரி நடைபெறும் நேரத்தில் பங்கேற்பது முதல் வகையாகும்.

சூரியன் கும்ப ராசியில் இருக்கும் போது அமையும் மாதம் மாசி மாதம்.

குரு சிம்ம ராசியில் இருக்க வேண்டும்.

அதற்கு நேர் ஏழாம் வீடான அதாவது சம சப்தம ஸ்தனமான கும்ப ராசியில் சூரியன் இருக்க வேண்டும்.

சந்திரனும் மக நட்சத்திரமும் கூட வேண்டும்.

அது பவுர்ணமி நாளாக இருக்க வேண்டும். அதுவே மகாமக நாளாகும்.

இத்தகைய கிரக அமைப்புகள் நாளில் ரிஷப லக்னத்தில் (சுமார் 12 மணி அளவில்) மகாமகம் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

இத்தீர்த்தவாரியில் பங்கேற்பது மகாமக ஸ்நானமாகும்.

இரண்டாம் வகை:

மக நட்சத்திரத்துடன் கூடிய மகாமக நாளில் காலை, இரவு என்ற வேறுபாடின்றித் தீர்த்தமாடுதல் இரண்டாம் வகையாகும்.

மூன்றாம் வகை:

மகாமக நாள்அமைந்த மாசி மாதத்தில் உள்ள எல்லா நாட்களிலும் மகா மக தீர்த்தத்தில் நீராடுதல் மூன்றாம் வகை.

இந்த நாட்களில் நீராடும்போது மகாமக ஸ்நான தான விதிகளை நன்றாகப் பின்பற்ற முடியும்.

நான்காம் வகை:

குருவுக்கு 'ஆண்டளப்பான்' என்று ஒரு பெயர் உண்டு.

ஒரு ராசியில் ஒருவருடம் இருப்பார்.

அதனை ஒட்டி அமைவது குரு வருடம்.

நவக்கிரக குரு சிம்ம ராசியில் பிரவேசம் செய்து கன்னி ராசிக்கு செல்லும்வரை அமைந்த காலப்பகுதி மகாமக வருடம் ஆகும்.

மகாமக ஸ்நான தான விதிமுறைகளை நமக்குச் சவுகரியமான நாளில் குடந்தைக்குச் சென்று

விதிமுறைகளைப் பின்பற்றி புண்ணிய நீராடலாம்.

எல்லா நாட்களும் புண்ணிய நாட்களே ஆகும்.

அவரவர் தம் பிறந்த நட்சத்திரம் முதலான நாட்களில் மகாமகம் குளத்தில் நீராடுவது விசேஷப் பலன்களைத் தரக்கூடியதாகும்.

Tags:    

Similar News